Tuesday, December 5, 2017

கம்ப சேவை

கம்ப சேவை திருவிழா .....

தஞ்சாவூர் பக்கத்துக்கு கிராமங்களில் கோடை காலத்தில் கம்ப சேவை என்ற விழா நடக்கும். இந்த விழா உள்ளூர் பெருமாள் கோயில் அல்லது பஜனை மடம் போன்ற பொது வழிபாட்டுத் தலங்களில்தான் நடைபெறும்.ஆயக்கோல் போன்ற ஒரு சிறு தூண் அல்லது கம்பம் நாடு நாயகமாக வைக்கப்பட்டு இருக்கும்.அதற்கு அபிஷேகம்,ஆராதனைகள்,அலங்காரங்கள் பூஜைகள் எல்லாம் நடக்கும்.இதற்கு முன்பாக சாதம் வடித்து மலைபோல் குவிக்கப்பட்டு இருக்கும்.ஊர் பெண்டிர் மாவிளக்கு போட்டு பித்தளை  சட்டிகளில் வைத்து இருப்பார்கள்.ஊரே அங்கு கூடியிருக்கும்.மேள தாள வாத்தியங்கள் முழங்க பெருத்த ஆரவாரத்துடன் வழிபாடு நடைபெறும்.இந்த நிகழ்வுகள் உச்சி பொழுதுக்கு மேல் தான் நடைபெறும்.

வழிபாடு முடிந்ததும் கோயிலை சுற்றி  கிடைக்கும் இடத்தில் வரிசையாக ஆண்,பெண்,குழந்தைகள்,வெளியூர் விருந்தினர்கள்,பரதேசிகள்,நரிக்குறவர் சமுதாயத்தினர் என்று ஊரின் அணைத்து சமுதாயத்தினரும் எந்த வேறுபாடும் இல்லாமல் சம்மணமிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.எல்லோருக்கும் வாழை இலை போடப்படும்.இலை நிறைய காய்கறி கூட்டு, பொரியல்,பச்சடி,ஊறுகாய்,என்று வெஞ்சனத்துடன் அன்னம் பரிமாறப்பட்டு, சாம்பார்,ரசம்,பாயாசம்,மோர் என்று வடை பாயாச விருந்து தட புடலாக நடைபெறும்.தேவைப்பட்டவர்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் அன்னம் முதலிய உணவு பதார்த்தங்களை வாங்கி செல்வார்கள்.எவ்வளவு கேட்டாலும் முகம் கோணாமல்,முனுமுனுப்பு இல்லாமல் மலர்ந்த முகத்துடன் உபசாரம் நடக்கும்.

சரி....இந்த கம்ப சேவை சோற்று திருவிழாவின் பின்னணி என்னவாக இருக்கும்.சங்க இலக்கியங்கள் துணை கொண்டு இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போமா..........