Monday, July 3, 2017

சொல்ல மறந்த கதைகள்..........

     தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை மராட்டிய மன்னர் சிவாஜி மகாராஜ் (            )ஆட்சி செய்த காலம்.அவருக்கு நான்கு மனைவியர் இருந்தும் ஆண் வாரிசுகள் இல்லை.அப்பொழுது கிழக்கிந்திய கம்பனி நாடு பிடிக்கும் சூழ்ச்சியில் ஒரு சட்டம் கொண்டு வந்தது.ஒரு ராஜ்ஜியத்தின் மன்னருக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் அந்த ராஜ்ஜியம் கம்பெனியார் கபளீகாரம் செய்து விடுவார்கள்.அவனென்ன நமக்கு பங்காளியா ? பார்த்தார், சிவாஜி ராஜா..அரசவையின் முக்கிய பதவியில் உள்ளோரையும்,நெருங்கிய உறவினர்களையும் கலந்து ஆலோசித்தார்.அதன் படி தன மந்திரி பிரதானியர்களையும் உறவுகளையும் மராட்டிய மண்ணுக்கு அனுப்பி அரச குடும்ப பெண்களைப் பார்த்து திருமணதிற்கு ஏற்பாடு செய்ய அனுப்பினார்,

           தஞ்சை மன்னர்களுக்கும் மராட்டிய மண்ணின் கோல்ஹாபூர் அரச குடும்பத்திற்கும் பெண் கொடுத்து எடுக்கும் உறவு உண்டு...இன்றும் கூட...!!தஞ்சை மன்னரின் திருமண தூதுவர்கள் கோல்ஹாபூர் சென்றார்கள்; தங்கள் மன்னரின் விருப்பத்தை தெரிவித்தார்கள்;கோல்ஹாபூர் மன்னருக்கு ஏக சந்தோசம்..சம்பந்தி புறத்தில் இருந்து வந்தவர்களுக்கு தடபுடல் உபசாரம்; மன்னர் தன மனைவியிடம் தஞ்சாவூர் சம்பந்தம் பற்றி கலந்து ஆலோசித்தார்; அபோழுதான் ஒரு தகவலை கோல்ஹாபூர் ராணி மன்னனிடம் தன மகள் திருமணதிற்கு விதித்துள்ள நிபந்தனையை சொன்னார்..இதை கேட்டதும் மன்னருக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

 அப்படி என்ன சொன்னார் ராணி.? மன்னரின் மகளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை ..ஒன்னும் பெரிய ஆசையெல்லாம் கிடையாது.,பண்டரிபுரத்தில்  அருளாட்சி செய்யும் ரகுமாயி சமேத பாண்டு ரங்கனை சேவிக்க வேண்டும். அதுவும் திருமணதிற்கு முன் சேவிக்க வேண்டும். .

No comments:

Post a Comment