தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான இடங்கள் பட்டியல்...பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய கோயில் ,அரண்மனை.அவ்வளவுதான்.
சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல..தஞ்சைவாசிகளுக்கே தெரியாத ஒரு கலை பொக்கிஷம் " சின்ன அரண்மனை " ......தஞ்சையை ஆண்ட மராட்டிய வம்சத்தின் 12வது மன்னன் இரண்டாம் சிவாஜி ராஜா போன்ஸ்லே .இவருக்கு 4 மனைவியர் இருந்தும் ஆண் வாரிசுகள் தங்கவில்லை.வாரிசுகள் இல்லை என்றால் ,கிழக்கிந்திய கம்பனியார் சட்டப்படி ராஜ்ஜியம் ஆங்கிலேயர் வசம் போய் விடும்.எனவே சிவாஜி மகா...ராஜா மராட்டிய தேசத்தில் இருந்து 17 பெண்களை அழைத்து வந்து ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டார்..ஆக 21 சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற ராணிகள் மன்னருக்கு.
சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல..தஞ்சைவாசிகளுக்கே தெரியாத ஒரு கலை பொக்கிஷம் " சின்ன அரண்மனை " ......தஞ்சையை ஆண்ட மராட்டிய வம்சத்தின் 12வது மன்னன் இரண்டாம் சிவாஜி ராஜா போன்ஸ்லே .இவருக்கு 4 மனைவியர் இருந்தும் ஆண் வாரிசுகள் தங்கவில்லை.வாரிசுகள் இல்லை என்றால் ,கிழக்கிந்திய கம்பனியார் சட்டப்படி ராஜ்ஜியம் ஆங்கிலேயர் வசம் போய் விடும்.எனவே சிவாஜி மகா...ராஜா மராட்டிய தேசத்தில் இருந்து 17 பெண்களை அழைத்து வந்து ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டார்..ஆக 21 சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற ராணிகள் மன்னருக்கு.
இத்தனை மனைவியர் இருந்தாலும் சிவாஜி மன்னருக்கு ,42 அங்கீகாரம் பெறாத, காமக் கிழத்தியர் என்னும் concubines இருந்தார்கள்.இவர்கள் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.மிகுதியானவர்கள் கன்னட தேசத்தவர்கள். மன்னர் இவர்கள் வசிக்க தஞ்சை தெற்கு ராஜ வீதியில் ஒரு "சின்ன அரண்மனை "கட்டினார். அதற்க்கு மங்கள விலாசம் என்று பெயர் .பிரதான அரண்மனை சர்ஜாமாடிக்கும் இதற்கும் சுரங்க வழி இருந்தது.இவர்கள் அம்மாமார் எனப்பட்டனர்.இவர்கள் நிருவாகத்திற்கு பல கிராமங்கள் மானியமாக விடப்பட்டன.இவர்கள் ராணிகளை போன்றே சகல அந்தஸ்து,கெளரவம் பெற்று இருந்தார்கள்.இவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் ,குழந்தைகளை அரண்மனை ராணிகளின் பராமரிப்பிலும் வளர்ப்பிலும் கூட இருந்தார்கள். இவர்கள் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கோயில்களுக்கு பல நிவந்தங்களையும் தர்மங்களையும் தங்கள் பெயராலே செய்து கல்வெட்டிலும் பதிவு செய்து உள்ளார்கள்.இவர்கள் செல்வ செழிப்புடன் , மரியாதையுடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவை சான்றாக உள்ளன.இவர்களுக்காக தஞ்சையில் ஒரு அம்மன் கோயிலும் கட்டப்பட்டது.கர்நாடகாவில் உள்ள எல்லம்மா கோயில்தான் அது. இன்று அது எல்லையம்மன் கோயில் எனப்படுகிறது. தெருவிற்கும் கூட அதே பெயர்தான்.மன்னர் மறைவிற்குப் பின்னும் இவர்கள் கணவனை இழந்த அரசகுல மகளிர் இருக்கவேண்டிய நியதிப்படிதான் இருந்திருக்கிறார்கள் .
இவ்வளவு மனைவியர் இருந்து கூட மன்னர் சிவாஜி வாரிசுகள் இல்லாமல்தான் இறந்தார்.இவரது சமாதி கோயில் தஞ்சை ராஜாகோரி சுடுகாடு கைலாச மகாலில் உள்ளது ,இவரது சமாதி கோயிலை சுற்றி இவரது 11 ராணிகள் சமாதி கோயிலும் ,இறந்த வருஷம், தேதி ,திதி மற்றும் பெயர் பொறிப்புடன் இன்றும் உள்ளன...இவையும் பாழடைந்துதான் கிடக்கின்றன.இதுபோன்று மன்னர் அவரது மனைவியர் சமாதி கோயில்கள் ஒரே இடத்தில வேறெங்கும் இருப்பதாகத் தெரிய வில்லை.
தஞ்சையின் மரபு சின்னமான ,பாரம்பர்யத்தை பறை சாரரும் மங்களவிலாசம் பெயர் கூட இன்று தஞ்சைவாசிகளுக்கு தெரியாது.ஒருகாலத்தில் தஞ்சை சிவாஜி ராஜா போன்ஸ்லே அபிமான மனைவியர் வாழ்ந்த அரண்மனை இன்றும் நிலையை இந்த புகை படங்களே சான்று .இன்று தனியாருக்கு ( ? ) சொந்தமான இந்த மாளிகையில் மளிகை கடை, ஓட்டல்கள் ,என பல வணிக நிறுவனங்களோடு ஒரு தனியார் பள்ளியும் கூட இங்கு செயல்பட்டு வருகிறது...
இதனை மீட்டு தஞ்சையின் பாரம்பர்ய சின்னமாகப் பராமரிக்கவேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் ,மற்றும் தஞ்சைவாசிகளின் தனியாத ஆசை ...நடக்குமா.......? ( நான் எழுதிய இத் தகவல் தினமலரில் 22.12.2008 ல் பிரசுரிக்கப்பட்டது.)
இவ்வளவு மனைவியர் இருந்து கூட மன்னர் சிவாஜி வாரிசுகள் இல்லாமல்தான் இறந்தார்.இவரது சமாதி கோயில் தஞ்சை ராஜாகோரி சுடுகாடு கைலாச மகாலில் உள்ளது ,இவரது சமாதி கோயிலை சுற்றி இவரது 11 ராணிகள் சமாதி கோயிலும் ,இறந்த வருஷம், தேதி ,திதி மற்றும் பெயர் பொறிப்புடன் இன்றும் உள்ளன...இவையும் பாழடைந்துதான் கிடக்கின்றன.இதுபோன்று மன்னர் அவரது மனைவியர் சமாதி கோயில்கள் ஒரே இடத்தில வேறெங்கும் இருப்பதாகத் தெரிய வில்லை.
தஞ்சையின் மரபு சின்னமான ,பாரம்பர்யத்தை பறை சாரரும் மங்களவிலாசம் பெயர் கூட இன்று தஞ்சைவாசிகளுக்கு தெரியாது.ஒருகாலத்தில் தஞ்சை சிவாஜி ராஜா போன்ஸ்லே அபிமான மனைவியர் வாழ்ந்த அரண்மனை இன்றும் நிலையை இந்த புகை படங்களே சான்று .இன்று தனியாருக்கு ( ? ) சொந்தமான இந்த மாளிகையில் மளிகை கடை, ஓட்டல்கள் ,என பல வணிக நிறுவனங்களோடு ஒரு தனியார் பள்ளியும் கூட இங்கு செயல்பட்டு வருகிறது...
இதனை மீட்டு தஞ்சையின் பாரம்பர்ய சின்னமாகப் பராமரிக்கவேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் ,மற்றும் தஞ்சைவாசிகளின் தனியாத ஆசை ...நடக்குமா.......? ( நான் எழுதிய இத் தகவல் தினமலரில் 22.12.2008 ல் பிரசுரிக்கப்பட்டது.)


No comments:
Post a Comment