Thursday, March 16, 2017

சொல்ல மறந்த கதைகள்...


தஞ்சை மராட்டிய மன்னருக்கு உதவிய வெள்ளைக்கார கவர்னர் சிறை தண்டனை அனுபவித்து மாண்ட கதை....




      தஞ்சாவூரில் ரயிலடி பக்கம் எங்கள் வீடு. சுற்றிலும் மராட்டிய குடும்பங்கள்.எளிய பிரிவினர்கள்தான்.எனக்கு 10 வயசு இருக்கும்.ஸ்கூலுக்கு டிரஸ்( ? !) பண்ணிக்கிட்டு கிளம்பும் போது, அந்த குடும்பத்தில் உள்ள அஜ்ஜி- பாட்டி-என்னை பார்த்து ," பீகாட்டு துரை கெளம்பிட்டாருன்னு " என்று கிண்டல் பண்ணுவார்.அதை கேட்கவே எனக்கு அருவருப்பா இருக்கும்..எரிச்சலாகவும் இருக்கும்.ஏதோ அசிங்கமா சொல்றாருன்னு அம்மாகிட்டே புகார் பண்ணுவேன்...இது தினமும் நடந்த கதை......
ஆனால் அந்த பாட்டி சொன்ன "பீகாட்டு துரை " ஒரு பெரும் வரலாற்று செய்தி உண்மையை உரக்கச் சொன்ன ஒரு தியாகியின் கதை என்பது 60 வருஷம் கழிச்சுதான் எனக்கு தெரிந்தது.

தஞ்சாவூரின் 9 வது மராட்டிய மன்னன் இரண்டாம் துளஜா போன்ஸ்லே . கி.பி 1763 முதல் 1787 வரை சோழ தேசத்தை ஆண்டவர்.தஞ்சையை ஆண்ட மன்னர்களில் மிகவும் பலஹீனமான மன்னன் ,இவர் காலத்தில், கர்நாடக நவாபு முகமது அலிகான் வாலாஜா தஞ்சையை முற்றுகை இட்டு கைப்பற்றிக்கொண்டான். தஞ்சை மன்னர் துளஜா II ,கைது செய்யப்பட்டு 1773 முதல் 1776 வரை அரண்மனையிலேயே காவலில் வைக்கப்பட்டார். ( The King himself was under house arrest. ).. அரண்மனையின் பொக்கிஷங்கள், கோயிலின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

     பெரிய கோயிலில் கிழக்கிந்திய கம்பெனி படையும் கர்நாடக நவாபின் படையும் மூன்று ஆண்டுகள் ,ஆக்ரமித்து கொண்டு தங்கி அதனை படை வீடாக மாற்றி இருந்தார்கள். பெரிய கோயில் cantonment ஆக மாறி போனது. தஞ்சைக்கும் பெரிய கோயிலுக்கும் மிகவும் சோதனையான காலம்.
அப்போதைய Madras மாகாண கவர்னராக இருந்தவர் ( President of East India company ) Lord George Bigot - லார்ட் ஜார்ஜ் பிகாட். துளஜா மன்னரின் தந்தை பிரதபசிம்ஹா மகாராஜா காலத்திலும் இவரே கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை பொறுப்பில் 8 ஆண்டுகள் இருந்து இருக்கிறார். 12 ஆண்டுகள் பிற பதவி வகித்தவர் மீண்டும் Madras கே வந்து பொறுப்பு ஏற்று கொள்கிறார்.
தஞ்சை மன்னரின் கைதும் கர்நாடக நவாபின் அட்டூழியங்களும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. தஞ்சைக்கு வந்த லார்ட் பிகாட் , கர்நாடக நவாபின் பிடியில் இருந்து தஞ்சையை மீட்டு ,துளஜாவையும் 11-4-1776 ல் தஞ்சையின் அரியாசனத்தில் உட்க்காரவைக்கிறார்.தஞ்சையும் பெரிய கோயிலும் பெரும் அழிவில் இருந்து காப்பாற்றப்படுகின்றன.
சும்மா இருப்பாரா கர்நாடக நவாபு ?லார்ட் பிகாட்டின் . நடவடிக்கையால் கம்பெனிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்ப்பட்டது என்று இங்கிலாந்துக்கு பொய் புகார் அனுப்பினார். தன் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தி ,மேலிடத்தில் அழுத்தம்கொடுத்து லார்ட் பிகாட்டை பழி வாங்கினான். பணம்தான் பத்தும் செய்யுமே ! இங்கே எப்படி ? இன்னும் மோசம்... கம்பெனிக்கு எதிராக செயல்பட்டு ,நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று, லார்ட் பிகாட் , 1776 ல் பதவி நீக்கம் செய்யப்பட்டு,கைது செய்யப்பட்டு இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கே சிறையிலும் அடைக்கப்பப்பட்டார் Court of Directors of Great Britain , இவ் வழக்கை மீண்டும் விசாரித்ததில் பிகாட் குற்றமேதும் செய்யவில்லை என்றும் கர்நாடக நவாபின் சதியினால் அவர் சிறை படுத்தப்பட்டார் என்பதும் தெளிவானது. அவர் விடுதலை செய்யப்பட்டதுடன் ,மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் மாகாண பொறுப்பு வழங்கப்பட்டது. காலதாமதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு..!!!ஆனால், நீதிக்கு போராடிய தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை எண்ணி எண்ணி பிகாட், தீர்ப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே காலதேவன் அவரை சிறை மீட்டு சென்றான்.

      தஞ்சைக்கு நீதி வழங்கி ,தஞ்சை மண்ணையும் ,மன்னனையும் காப்பாற்றிய லார்ட் ஜார்ஜ் பிகாட் ஐ மறக்காத தஞ்சை மக்கள் 250 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. செவி வழி செய்தியானாலும் ஒரு வரலாறே இதனுள் பொதிந்து கிடக்கிறது பாருங்கள். இதுதான் அந்த "பீ காட்டு துரை " கதை.இது தெரியாமல்.... sorry Ajji.......

      இப்ப்டியாக தஞ்சை மன்னனுக்கு உதவி செய்ய போய் ,கைது செய்யப்பட்டு,சிறையில் வாடி செத்துப்போன வெள்ளையர் Lard George Bigot நம் தஞ்சை சரித்திரத்தின் ஏடுகளில் எழுதப்பட வேண்டிய ஒரு உன்னத தியாகிதான்......இனியாவது இந்த கதையை மறக்காமல் நம் இளைய தலைமுறைக்குச் சொல்லுங்கள்.....அப்பா! மனதில் இருந்து ஒரு பாரத்தை இறக்கி வைத்தாகி விட்டது....

https://www.facebook.com/selvaraj.nayakkavadiyar/posts/1488828687802043

2 comments: